மனைவிக்கு கோவிட் தொற்று! - நாட்டை விட்டு சென்ற கணவன்
கர்ப்பிணி மனைவிக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதால் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கேகாலை சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு முன்பு குறித்த நபர் நாடு திரும்பியிருந்த நிலையில் துபாயில் கடமையாற்ற வேண்டியிருந்ததால் அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மனைவிக்கு ஆகஸ்ட் 16ம் திகதி கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் வசிப்பவர்கள் செப்டம்பர் முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கணவர் ஆகஸ்ட் 28ம் திகதி அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
