மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கண்டி, நாவலப்பிட்டியில் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான கயானி தில்ருக்ஷி குமாரி என்ற 46 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டுக்குள் ரகசிய புகுந்த கணவன் படுகொலை செய்ததாக, மகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப முரண்பாடுகள்
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையில் முரண்பாடுகள் காரணமாக சில காலம் பிரிந்திருந்த நிலையில் இன்று அதிகாலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற மகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri