மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கண்டி, நாவலப்பிட்டியில் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான கயானி தில்ருக்ஷி குமாரி என்ற 46 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டுக்குள் ரகசிய புகுந்த கணவன் படுகொலை செய்ததாக, மகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப முரண்பாடுகள்
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையில் முரண்பாடுகள் காரணமாக சில காலம் பிரிந்திருந்த நிலையில் இன்று அதிகாலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற மகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
