வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்: கொடூரமாக கொல்லப்பட்ட இளம் மனைவி
குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.
இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.
மனைவி குத்திக் கொலை
இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் 02 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவன் கைது
கொலையை செய்த சந்தேகநபரான கணவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தால் சிறை அதிகாரியின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
