ஊடகவியலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு
பாகிஸ்தானில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊகட செயற்பாட்டாளர்கள் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்களை ஊக்குவித்ததாக ஊடகவியலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டில் வசித்து வருவதால், நீதிமன்றத்தில் ஒருவர் கூட முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி தஹீர் அபாஸ் சிப்ரா இந்த தீர்ப்பை நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2023 மே மாதம், இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் சில இராணுவ கட்டிடங்கள் மற்றும் அரசு சொத்துகளை தாக்கினர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணி காரணமாக, பாகிஸ்தானிய அரசு மற்றும் இராணுவம், தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் நூற்று கணக்கானவர்களை குற்றம்சாட்டி விசாரணை செய்தது.
இந்த விசாரணைகள், விமர்சன செய்திகளை தடுக்கும் நடவடிக்கை என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சீ.பி.ஜே குற்றம்சாட்டியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம் என்பதுடன் பாகிஸ்தானுக்கு திரும்பினால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam