பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய தம்பதி
களுத்துறையில்(Kalutara) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(06.06.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
வாத்துவ பொலிஸ் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்ய சென்ற கணவன் - மனைவி இருவருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பிரிவுக்கு சென்ற நிலையில், அருகில் உள்ள சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையில் இருந்த பணப்பையை திருடியுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |