முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

Kalutara Sri Lanka Police Investigation Western Province
By Dharu Nov 20, 2023 11:33 PM GMT
Report

களுத்துறையில் இளைஞர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து பணம் பறித்த சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை, ஹல்தொட்ட தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதான மனைவிக்கு 25 வயது எனவும் அவரது கணவருக்கு 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

யாழில் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வலுக்கும் கண்டனங்கள்

யாழில் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வலுக்கும் கண்டனங்கள்

பொலிஸார் விசாரணை

பணம் பறிக்கப்பட்ட இளைஞனும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கிய பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில்,

முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண் உள்ளிட்ட இருவர் கைது | Husband And Wife Arrest Extorting Money

'' குறித்த பெண் வேறொரு நபரை திருமணம் செய்த பின்னர், தன்னை விட்டு பிரிந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு என்னை அவரது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறினார். அதன் பின்னர் பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில் நான் அவரது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது அந்த பெண் தன்னை ஒரு அறையில் தங்குமாறு கூறினார். பின்னர், வீட்டில் மறைந்திருந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு நபரும் திடீரென அத்துமீறி நுழைந்து என்னை தாக்கினர்.

மேலும் தாக்குதலில் இருந்து என்னை விடுவிக்க 50,000 ரூபா கப்பம் கோரினர். இதன்போது வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த 25,000 ரூபா பணம், ஏ.டி.எம் அட்டை மற்றும் அதன் இரகசிய இலக்கத்தை அவர்களிடம் வழங்கினேன்.

வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

நீதிமன்றில் முன்னிலை

குறித்த பெண்ணும் மற்றைய நபரும் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் பலவந்தமாக அங்கேயே வைத்திருந்தனர்.

மிகுதி 25,000 ரூபாய்க்கு பதிலாக தனது கைத்தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர். மிகுதி 25000 ரூபாவிற்கு கைத்தொலைபேசியை அடகு வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்குள் அதனை திரும்ப பெற தவறினால் அதற்கான உரிமையை தான் பெற்றுக்கொள்வதாகவும் போலி கடிதமொன்றை எழுதுமாறு சந்தேகநபர்கள் மிரட்டினார்கள்" என தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண் உள்ளிட்ட இருவர் கைது | Husband And Wife Arrest Extorting Money

இந்நிலையில் குறித்த வீட்டில் இளைஞன் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் துரித கதியில் செயற்பட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மனைவியை கைது செய்துள்ளனர்.

தாக்குதலால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப்பம் கோரப்பட்ட பணத்தில் இருந்து 24,500 ரூபாயும், சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பலவீனமடையும் அமெரிக்கா! ஆபத்தாகும் ஈழத்தமிழர் எதிர்காலம் (Video)

பலவீனமடையும் அமெரிக்கா! ஆபத்தாகும் ஈழத்தமிழர் எதிர்காலம் (Video)

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண் (Photos)

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண் (Photos)

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US