ஒரு நாளிற்கு நூற்றுக்கணக்கான உக்ரைனிய துருப்புக்கள் மரணம்: மைக்கேலோ போடோலியாக் -உலக செய்திகள்
ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மேற்கத்திய பீரங்கி அமைப்புகள் தேவை என அவர் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்ய படைகள் அணுசக்தி அல்லாத அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. கனரக பீரங்கி, பல ரொக்கெட் ஏவுதள அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை இதில் அடங்கும்.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிகமான ஆயுதங்கள் தேவை. ரஷ்ய மற்றும் உக்ரைனியப் படைகளுக்கு இடையே உள்ள முழுமையான சமத்துவமின்மை உக்ரைனின் அதிக உயிரிழப்பு வீதத்திற்குக் காரணம்." என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
