இலங்கை தொடர்பான அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிப்பு!

United for Human Rights United Human Rights Geneva Sri Lanka OHCHR
By Jenitha Sep 23, 2022 09:35 AM GMT
Report

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான குழு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானத்தை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள்

இலங்கை தொடர்பான அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிப்பு! | Human Rights Council Sri Lanka Resolution Today

கனடா, ஜேர்மனி, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான தற்போதைய நிலைமை, பொருளாதார நெருக்கடி, உணவு, ஔடதங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்

இலங்கை தொடர்பான அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிப்பு! | Human Rights Council Sri Lanka Resolution Today

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற புதிய வரைவுத் தலைப்பு, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிக கால அவகாசத்தை வழங்குகிறது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை இந்த வரைவு கோரியுள்ளது.

வரைவின்படி, மனித உரிமைகள் பேரவையின் 53வது அமர்வு மற்றும் 55வது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்புகளையும், அதன் 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் அதன் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மேலதிக தெரிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அலுவலகம் கோரப்பட்டுள்ளது.

2021 இன் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் மோசமடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, கோவிட் தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ளமை மற்றும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் உட்பட இலங்கை மக்கள் மீது இது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கிறது.

பணியாளர் மட்ட உடன்படிக்கை

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால முயற்சிகளை அங்கீகரிக்கிறது மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கையை வரவேற்கிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய ஆணைக்குழுக்கள் மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் மற்றும் நீதித்துறை நிறுவனங்களின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தீர்மானம் அங்கீகரிக்கிறது.

நல்லிணக்கம் மற்றும் அதன் மக்கள் தொகையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் ஒருங்கிணைந்த அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை அது கேட்டுக்கொள்கிறது.

புதிய தீர்மானம் ஏப்ரல் 2022 முதல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கைதுகள், அத்துடன் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, இறப்பு, காயங்கள், அழிவு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் முன்னேற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கிறது அத்துடன் அனைத்து தாக்குதல்கள் மற்றும் பொறுப்புக் கூறப்பட்டவர்கள் மீதும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த அநீதிக்கு எதிராக ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் குரல் 



மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US