அரச வாகன விற்பனையால் பெரும் நட்டம்!
அரச வாகனங்களை அரசாங்கம் விற்பனை செய்ததன்; மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, இந்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் முறையிடவுள்ளதாக கூறியுள்ளார்.
பொது ஏலத்தில் வாகனங்களை விற்காமல், கேள்விப்பத்திர நடைமுறையை ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பொது ஏலம்
பொது ஏலத்தில் வாகனங்கள் விற்கப்பட்டிருந்தால் அரசுக்கு சுமார் 650 முதல் 700 மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைத்திருக்கும்.

எனினும் கேள்விப்பத்திர முறையில் 17 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய் மட்டுமே வருமானம், கிடைத்துள்ளதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam