வெப்பமான காலநிலை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பமான காலநிலை
அதுமட்டுமின்றி திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், போதுமான அளவு தண்ணீர் பருகவும், வெயில் தாக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்புற நடவடிக்கை
கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |