தலவாக்கலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற விருந்துபசாரம்!
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் விருந்து மண்டபத்தில் விருந்து நடத்தியதற்காக தலவாக்கலை -லிந்துலை நகர சபைத் தலைவர் மற்றும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தை நகரசபை தலைவர் நடத்தி வருவதாக 119 அவசர பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து தலவாக்கலை பொலிஸார் நகர சபை தலைவர் மற்றும் ஏனையோரை கைது செய்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது விருந்தில் கலந்துகொண்ட மற்றொரு குழுவினர் தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகர சபைக்கு சொந்தமான வாகனத்தையும் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காக தலைவர் மற்றும் 6 பேர் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.