திருகோணமலையில் குடும்பத்தகராறு காரணமாக வீட்டுக்கு தீவைப்பு
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த தீ விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கோபம் கொண்ட கணவர் வீட்டைச் சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை தீ வைத்ததாகக் கூறப்படும் கணவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த தீ விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.