பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் தப்பியோட்டம்: யாழில் சம்பவம் (Photos)
மதுபோதையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பெண், போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (22.02.2023) காலை யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மது போதையிலிருந்த இளைஞன்
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகரை நோக்கி இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது யாழ். கொட்டடியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு துவிச்சக்கவண்டியில் சென்ற இளம் குடும்பப் பெண் மீது மோதிவிட்டு தப்பியோடியுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய இளைஞன் மது போதையிலிருந்துள்ளார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
