ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அறிக்கை

Anura Kumara Dissanayaka Harini Amarasuriya Law and Order
By Dharu Aug 27, 2025 08:33 AM GMT
Report

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை பரிசீலனைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்களில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பலர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..

விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..

பரிசீலனைக்கு அழைக்க உத்தரவு

இதன்படி ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அறிக்கை | Highcourt Issues Report Including President And Pm

இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், மனுதாரர்களில் ஒருவரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, இந்த வழக்கை பரிசீலிக்க விரைவான திகதியை வழங்குமாறு கோரினார்.

ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மகிந்தவின் சாட்சியம்

ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மகிந்தவின் சாட்சியம்

மனுதாரர் தரப்பு 

அதன்படி, பிரதிவாதிகளுக்கு மேலும் அறிக்கை அனுப்புமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அறிக்கை | Highcourt Issues Report Including President And Pm

பின்னர், மனுவை ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசு 2022 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது”

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US