ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள சிஸ்கே வீரர்! வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நெகிழ்ச்சி பதிவு
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
Special day and hence a special beginning.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2025
They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.
Would like to thank all the franchisees for all the…
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது.
ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முக்கிய பங்கு
2009-ல் CSK வுடன் IPL லில் அறிமுகமான அஸ்வின், 16 சீசன்களில் 221 போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தி IPL லின் 5ஆவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உயர்ந்துள்ளார்.
சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் விளையாடிய இவர், 2010, 2011 CSKவின் IPL வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
