போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி
இஸ்ரேலிய போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை லெபனானில் உள்ள ஈரானின் சார்புப் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா வீசியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் இது அதன் முதல் தாக்குதலாகும்.
முதல் தாக்குதல்
போர் தொடங்கியதிலிருந்து நடந்த மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை லெபனானை வெறும் 10 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்துத் தாக்கியது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

லெபனானின் சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 900 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்தனர்.
இருப்பினும், லெபனானில் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.