கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்! மீண்டும் நேட்டோ மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப்
நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ இருக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ இருக்கவில்லை, மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் இருக்க மாட்டார்கள். கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள், அந்தப் பெரிய, மோசமாக நிர்வகிக்கப்பட்ட பனிக்கட்டித் துண்டை!!! என குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று வெள்ளை மாளிகையில் நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவுடனான தனது சந்திப்பிற்குப் பிறகு, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
டேனிஷ் பிரதேசத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கத்தை ட்ரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறதா சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை நேட்டோவில் உள்ள பல அமெரிக்க நட்பு நாடுகள் எதிர்த்தன.
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..