இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி பலி
லெபனானில் உள்ள ஷப்ரா பகுதியில், இஸ்ரேலிய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் லிட்டானி துறை மூத்த தளபதி கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை, தெற்கு லெபனானில் உள்ள ஷப்ரா பகுதியில், இடம்பெற்ற இந்த தாக்குதலில் முகமது கட்டார் அல்-ஹுசைனி என்ற தளபதியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இந்த தாக்குதலை இஸ்ரேலிய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அல்-ஹுசைனி நஹாரியா
இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களின் போது அல்-ஹுசைனி நஹாரியா, ஹைஃபா மற்றும் பிற நகரங்களை நோக்கி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பான காணொளியையும் இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்டுள்ளது.
מוקדם יותר היום, כלי טיס תקף וחיסל את מחמד ח'צ'ר אלחסיני, מפקד מערך האש של גזרת הליטאני בארגון הטרור חיזבאללה, במרחב שבריחה שבדרום לבנון.
— Israeli Air Force (@IAFsite) June 20, 2025
במהלך המלחמה המחבל הוביל מתווי ירי רבים לעבר נהריה, חיפה וערים נוספות בשטח המדינה
חיל-האוויר ימשיך לפעול על מנת להסיר כל איום על מדינת ישראל. pic.twitter.com/QmEiZXyz3E

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன? 10 நிமிடங்கள் முன்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
