மருந்து வகைகள் தட்டுப்பாடு: புலம்பெயர் உறவுகளிடம் உதவி கோரும் வட்டுக்கோட்டை மருத்துவர்

Sri Lanka
By Kajinthan Feb 13, 2023 07:19 AM GMT
Report

நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்து வகைகள் இல்லாததால் வைத்தியர் சேவையை சரியாக செய்ய முடியாமலுள்ளது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகள் உதவ வேண்டும் என வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (12.02.2023) வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருந்து வகைகள் தட்டுப்பாடு: புலம்பெயர் உறவுகளிடம் உதவி கோரும் வட்டுக்கோட்டை மருத்துவர் | Help With Diaspora Relations

நிதி வசதி இல்லாத நிலை

குழந்தைகளுக்கான பாணி மருந்துகள், நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்து வகைகள் எமது வைத்தியசாலையில் இல்லை. நோயாளிகளை வெளியே வாங்குமாறு கூறவும் எமக்கு மனம் வரவில்லை.

ஏனென்றால் மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் உள்ளார்கள். அவர்களை மேலும் கட்டத்திற்குள் தள்ளுவதற்கு மனமில்லாமல் இருக்கிறது. வைத்தியர் சேவையை சரியாக செய்ய முடியாமல் உள்ளது.

இந்த தொழிலில் இருந்து விலக வேண்டும் என்ற அளவிற்கு உள்ளது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளும் ஏனைய நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் எங்களுக்கு போதுமான அளவு குழந்தைகளுக்கான மருந்துகளையும், சளி மற்றும் காயம் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மருந்துகளையும் வழங்கினால் நன்றாக இருக்கும். அதைத்தவிர எங்களது அம்பியூலன்ஸ் நன்றாக பாவனையில் இருந்தது.

காரைநகர் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் பழுதடைந்ததன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் எமது வைத்தியசாலையில் விட்டுவிட்டு எங்களது வைத்தியசாலை அம்பியூலன்ஸை எடுத்துச் சென்றனர்.

மருந்து வகைகள் தட்டுப்பாடு: புலம்பெயர் உறவுகளிடம் உதவி கோரும் வட்டுக்கோட்டை மருத்துவர் | Help With Diaspora Relations

அம்பியூலன்ஸ் வசதி

காரைநகர் செல்லும் வீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆகையால் எமது ஆம்புலன்ஸின் நான்கு டயர்களும் பழுதடைந்து ஓட முடியாத நிலையில் இருந்தது.

5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் அம்பியூலன்ஸ் சேவிஸ் போடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் 9 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடிய பின்னரும் சேவிஸ் போடுவதற்கு நிதி வசதி இல்லாத நிலை காணப்பட்டது. அத்துடன் வேகக்கட்டுப்பாட்டு பாகங்களும் மோசமடைந்த நிலையில் உள்ளது.

ஆகையால் இந்த ஆம்புலன்ஸை பாவிப்பது நோயாளி, சாரதி மற்றும் அம்பியூலன்ஸுக்கு ஆபத்தானது. எனவே ஜனவரி மாத இறுதியில் இருந்து இந்த அம்பியூலன்ஸை பாதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.

வடமாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு நிதி வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடானது மிகவும் குறைவாக இருப்பதாகவே எனக்கு தெரிகிறது.

மருந்து வகைகள் தட்டுப்பாடு: புலம்பெயர் உறவுகளிடம் உதவி கோரும் வட்டுக்கோட்டை மருத்துவர் | Help With Diaspora Relations

உதவிகளை வழங்க வேண்டும்

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பழுது பார்க்கும் நிலையங்களில் திருத்தப்பட்டு, அதனை மீள எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனெனில் திருத்திய அம்பியூலன்ஸ்களை மீள எடுப்பதற்கு நிதி வசதி இல்லை.

ஆகையால் ஒரு சில அம்பியூலன்ஸ்கள் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சேவையில் ஈடுபடுகிறது. இதனால் எரிபொருள் வீண்விரயம் செய்யப்படுவதுடன் அம்பியூலன்ஸும் விரைவில் பழுதடைகிறது. எமக்கு கிடைக்கும் மருந்துகளின் அளவுகளும் குறைவாகக் காணப்படுகிறது.

அந்த மருந்துகளை எடுத்து வருவதற்கு அம்பியூலன்ஸ் இல்லாமல் தாமதிப்பதால் எமக்கான மருந்துகள் வேறு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

எனவே, புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளும் நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் முன்வந்து எமக்கான மருந்துகள் வாங்குவதற்கும் ஏனைய வைத்திய சேவைகளுக்குமான உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US