ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானியா! ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி
உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்,ரஷ்ய போர் குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.
உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவி
இந்நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேரடியாக வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை எனவும் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
