கொலம்பியாவில் உலங்கு வானூர்தி விபத்து : 9 இராணுவ வீரர்கள் பலி
வடக்கு கொலம்பியாவில் ராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு கொலம்பியாவில் கொரில்லா குழுக்களுடன் போரிடும் துருப்புக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்ற போது உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.
ரஷ்ய தயாரிப்பான எம்ஐ-17 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கொரில்லா தாக்குதல் அல்ல விபத்து என கொலம்பிய ராணுவம் உறுதி செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |