நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை வீழ்ச்சி! வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் (Video)
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று பிற்பகல் (30.04.2023) பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மேலும், கந்தப்பளை பிரதேசத்தில் விவசாய நிலங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் விளக்குகளை ஒளிரச்செய்தவாறு தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.








ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
