நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை வீழ்ச்சி! வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் (Video)
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று பிற்பகல் (30.04.2023) பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மேலும், கந்தப்பளை பிரதேசத்தில் விவசாய நிலங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் விளக்குகளை ஒளிரச்செய்தவாறு தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri