ராஜ்யசபாவில் வைகோவிற்கும் வெங்கையா நாயுடுவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம்
ராஜ்யசபாவில் நேற்றைய தினம் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கும் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ராஜ்யசபாவில் நேற்றைய தினம் வைகோ உரையாற்றிக்கொண்டிருக்கும் போது 'பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்; விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது,'' என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதன் காரணமாக சபையில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ராஜ்யசபாவில் ம.தி.மு.க., - எம்.பி., வைகோ உரையாற்றிய உரை பின்வருமாறு,
தென் மாநில எம்.பி.,க்களுக்கு வரும், மத்திய அரசின் அனைத்து கடித போக்குவரத்துகளும் ஹிந்தியில் தான் உள்ளன.ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை இது காட்டுகின்றது.
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் என எல்லாமே, ஹிந்தியில் மட்டுமே இருப்பதால் ஒன்றுமே புரிவதில்லை. இதற்காக கோடிக்கணக்கில் வரிப்பணத்தை மத்திய அரசு செலவழிக்கிறது.
ஆங்கிலத்தை பின்தள்ளும் போக்கை ஏற்க முடியாது. அனைத்து மாநில மொழிகளையும், மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வைகோ தனது கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது, சபை தலைவர் வெங்கையா நாயுடு இடைமறித்து ,நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்; போதுமானது. நீங்கள் பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது. இதையும் உங்களது வசதிக்காக ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகின்றேன் என்றும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைகோ குறிப்புகள் இல்லாமல் பேசத் துவங்கிய நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டமையினால் சில நிமிடங்கள் சபையில் பரபரப்பு நிலவியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கேன்ஸ் பட விழாவில் ஆடையில்லாமல் தவித்த நடிகை பூஜா ஹெக்டே - சாப்பிட முடியாமல் தவித்த பரிதாப நிலை! Manithan

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri

பேஸ்புக் காதல் மயக்கம்! ரகசிய கோப்புகளை பெண்ணுக்கு அனுப்பிய ராணுவ வீரர்! பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை News Lankasri

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022