வடமாகாண கருவாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு
வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நாட்டில் உப்பின் விலை அதிகரிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்ற நிலைமை காணப்படுகின்றது.
உப்பின் விலை
எனவே, தற்போதைய அரசாங்கம் இவ்விடத்தில் கவனம் செலுத்தி உப்பின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
இவ்விடயத்தை அரசாங்கம் கவனம் செலுத்தி சட்டவிரோத தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan