நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று(10.03.2026) கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
விசேட சந்திப்பு
இதன்போது, ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட மகாநாயக்க தேரர், நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

புதிய அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர் தனது நல்லாசிகளையும் வழங்கியுள்ளார்.
இந்த விசேட சந்திப்பில், பன்னிப்பிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் விகாராதிபதியுமான மகாநாயக்க தேரருடன், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய மாபலகம புத்தசிறி தேரரும் கலந்துகொண்டுள்ளனர்.

மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri