ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல்: எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் நீண்ட வரிசையில் (Photos)
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் சுமார் 4 நாட்களுக்கு பிறகு இன்றைய தினமே டீசல் விநியோகிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து டீசலை வாங்கி வரும் நிலையில், பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஒரு சிலர் வரிசையில் நின்று, டீசலை வாங்கி சென்று அதனை அதிக
விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.












ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
