முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழைப்பாணை..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக இணைத்தது மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தி யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜூன் மாதம் 16 மற்றும் 22ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொடவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்த திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை. இந்தநிலையில், இன்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
you may like this video
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam