மலையகப் பகுதியில் தீ வைப்பு: நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (27.02.2024) இடம்பெற்றள்ளது.
தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
இதனால் கொட்டகலை கொமர்சல் நேத்ரா பிளேஸ் சாந்திபுரம் சமாதானப்புரம் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் மல்லியைப்பூ தோட்டப்பகுதியிலும் வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவலின் தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச வாசிகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஏற்படவிருந்த சுற்றுப்புற சூழல் அழிவுகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
குறித்த தீ வைப்பு காணிகளை துப்பறவு செய்வதற்காகவும் காணிகளை
ஆக்கிரமிப்பதற்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படுவதாக பொது
மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகப் பகுதியில் வறட்சி
மலையகப் பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுவதனால் தீ மிக வேகமாக பரவி பல ஏக்கர்கள் நாசமாவதுடன் எமது பிரதேசத்திற்கு உரித்தான அரிய வகை தாவரங்கள்,மற்று சிறிய உயிரினங்கள் ஆகியன அழிந்து போயிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை வனப் பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் காட்டு விலங்கள் உணவு மற்றும் நீர் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரலாம் எனவும் இதனால் இந்த விலங்குகளுக்கும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் வறட்சியான காலப்பகுதியில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |