நாட்டில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் : ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது,
அரசியல் கூட்டணி
"இந்த நாட்டில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவோம். பலர் எம்முடன் இணைந்துள்ளனர். அனைத்து கட்சிகளில் இருந்தும் வருகின்றனர்.
சிவில் அமைப்புகளும் இணைந்துள்ளன. மேலும் பல தரப்பினரும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்குக் கூட்டணியில் இடமில்லை. இந்நாட்டில் உருவான பாரிய கூட்டணியாக எமது கூட்டணி அமையும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |