வவுனியா விபுலானந்தா கல்லூரி மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி
வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விரைவில் விளையாட்டு மைதானம் பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(20.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அதற்கான ஒரு நிரந்தர மைதானம் இதுவரை இல்லை.
பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
மைதானத்திற்கான நிலம் ஒன்றினை கொள்வனவு செய்ய நீண்ட நாட்களாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை அது கைகூடவில்லை.

இந்நிலையில், பிரதமர் என்ற அடிப்படையில் இந்தப் பாடசாலையின் மைதானப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகத்தால் ஹரிணி அமரசூரியவிடம் கோரப்பட்டது.
பாடசாலை தொடர்பில் கேட்டறிந்த பிரதமர் மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். மாணவர்களுக்கான மைதானம் விரைவில் பெற்றுத் தருவாக இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பிரதமருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன் மற்றும் செ.திகலகநான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam