தமிழக அரசின் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
தமிழக அரசால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்தது.
Sri Lanka today received Rs. 2 Billion worth Humanitarian aid including milk powder, rice and medicines from India. Our sincere gratitude to the Tamil Nadu Chief Minister Hon. @mkstalin and the People of India for the support extended (1/2)
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 22, 2022
இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளதுடன்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
தமிழக அரசால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்தப் பொருள் தொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள்
உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசால்
விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.