அம்பாறை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினிடம் சடலம் ஒப்படைப்பு
அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி (வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29.02.2024) விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் தெரியவருவகையில்,
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய வேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி மோதியதில் நேற்றுசிறுவன் படுகாயமடைந்தான்.
பிரதேசவாசிகள்
இந்நிலையில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க அருணா ஹர்ஷான் என்பதுடன் விபத்தின் போது சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த சிற்றூர்தி சிறுவனை மோதியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கலமுனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
