கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 6 பேர் பலி! அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திய ஹமாஸ்
கட்டார் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தோஹாவில் உள்ள அவர்களின் பேச்சுவார்த்தை குழு தப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
பேச்சுவார்த்தை குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை படுகொலை செய்ய எதிரியின் தோல்வியை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
ஆறு பேர் பலி
இந்த தாக்குதல் "சந்தேகத்திற்கு இடமின்றி நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் அமைதிக்கான எந்த உடன்பாட்டையும் எட்ட விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்களுக்கு அதன் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, இந்த குற்றத்திற்கு அமெரிக்க நிர்வாகம் ஆக்கிரமிப்புடன் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அடுத்து, தோஹாவில் நடந்த கூட்டத்தின் போது அவர்களின் பேச்சுவார்த்தை குழு குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam