துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பிண்ணனியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை
புதிய இணைப்பு
பேலியகொடை - ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கான பிண்ணனி உள்ளிட்டவை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
பேலியகொடை - ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
காரணம்..
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





இன்னும் இரண்டு வாரங்களில்... புடின் - ஜெலென்ஸ்கி தொடர்பில் உறுதி செய்த ஜனாதிபதி ட்ரம்ப் News Lankasri

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
