கொழும்பில் துப்பாக்கிச் சூடு : மாறு வேடத்தில் வந்த துப்பாக்கிதாரி
கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
'125 வத்தை' எனும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுவேடத்தில் வந்து
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் பிரதான துப்பாக்கிதாரி மாறுவேடத்தில் வந்து துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவனும், சிறுமி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri