நாடளாவிய ரீதியில் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு (PHOTOS)
திருகோணமலையில் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் சாரதிகள் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்வதினால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இருந்த போதிலும் திருகோணமலை நகரில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் விநியோகம் செய்யப்படுவதுடன் அவ்வாறு விநியோகிக்கப்படும் எரிபொருள் நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்கு கூட பயணிப்பதத்திற்கு எரிபொருள் இல்லாமல் பெரும் அவதியுறுவதாக பொதுமக்கள் கவலை அடைவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், திருகோணமலை நகர்,நிலாவெளி,சீனக்குடா மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களில் பெருமளவு டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அத்துடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு வேளைகளில் மாத்திரம் டீசல் விநியோகம் செய்யப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும் அவ்வாறு காத்திருந்து வாகனம் ஒன்றிற்கு 2000 ரூபா முதல் 3500 ரூபா வரை மாத்திரம் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் இவ்வாறு வழங்கபடும் எரிபொருள் குறிப்பிட்ட தூரம் மாத்திரமே பயணிக்க போதுமாக இருப்பதாகவும், இது தமக்கு பாரிய தலையிடியை கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு
எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்களுக்கு பயந்து மண்ணெண்ணை அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லையாம் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 1.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இருப்பினும் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்பட்ட அதேவேளை டீசல் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தினம் பெருமளவான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியமையை எம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.









ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
