கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவுகள் விரைவில் விடுவிக்கப்படும்!
கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவுகளும் மிக விரைவில் விடுவிக்கப்படும் என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (11) கிண்ணியாவில் முடக்கப்பட்ட கிராமங்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளும் கடந்த 11ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருந்த நிலையில், இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிரயாண தடை காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் இதுவரையில் 5000 ரூபாய் மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கிண்ணியாவில் முடக்கப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலே 5000 ரூபா ஒடுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்குவதற்கான நிதிகளை கூறியுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் செயற்படுத்தி வருவதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.