நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையையும் பொருட்படுத்தாது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வந்த போதிலும், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை
மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில் அழைத்துச் சென்று பரீட்சை நிலையங்களில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசாங்கத்தினால் விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - மலைவாஞ்சன்




இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri