அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் நடத்தும் நடமாடும் சிகிச்சை முகாம்
சமீபத்தில் "டிட்வா" சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் நாளை முதல் மன்னாரில் மூன்று நாள் நடமாடும் சிகிச்சை முகாம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் மருத்துவர். உபுல் ரஞ்சித் குமார கருத்துத் தெரிவிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு உதவவும், அவர்களின் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கால்நடைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க
இந்த நிகழ்ச்சித்திட்டம், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரசாங்க கால்நடை சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பண்ணைகளைக் கண்டறிவதற்காக மன்னாரில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு எட்டு குழுக்கள் அனுப்பப்படவுள்ளன.
அப்பகுதி மக்கள் தங்கள் விலங்குகளைச் சிகிச்சைக்காக கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க அப்பகுதியில் அறிவிப்புகள் வெளியிடப்படும். வெள்ளம் காரணமாகப் பல கால்நடைகள் மேய்ச்சல் நிலத்தை இழந்துள்ளதால், அவற்றின் தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 250 மெட்ரிக் டன் கால்நடைத் தீவனம் மன்னார் மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குமார தெரிவித்தார்.
நிலைமை சீரடையும் வரை கால்நடைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்தத் தீவனப் பங்கு உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 13 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam