வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கு! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கில் 72% எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிடம் (COPA) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 5ஆம் திகதிக்குள் மொத்த வருவாய் ரூ. 316 பில்லியனை எட்டியுள்ளது எனவும் இது திட்டமிடப்பட்ட இலக்கில் 72% என்றும் நிதியமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் கபில சேனநாயக்க தெரிவித்தார்.
ஆண்டு வருவாய்
கடந்த 6 ஆம் திகதிக்குள், 1,72,292 வாகனங்களுக்கு அமெரிக்க டொலர்களில் 1,278 நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு வருவாயை இரட்டிப்பாக்கி, இலக்கில் 150% ஐ எட்ட முடியும் என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தற்போதைய போக்குகளின் அடிப்படையில், வருவாய் ரூ. 450 பில்லியனை தாண்டக்கூடும் என்று ஏ.கே. செனவிரத்ன குறிப்பிட்டார்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri