அமெரிக்காவில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கிரீன்வுட் நகரில் இந்து மத வழிபாட்டு தலமான சுவாமி நாராயண் கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலானது நேற்றுமுன்தினம்(12) இடம்பெற்றுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவில் சுவரில் கருப்பு மையால் அவதூறு கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த முறைபாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam