இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் பற்றிய தகவல்களில் திருத்தம்
கோவிட் - 19 மரணங்கள் தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிழை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1ம் திகதி அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கோவிட் - 19 மரணங்களில் இரண்டு மரணங்கள் பற்றிய விபரங்கள் 2ம் திகதியான நேற்றைய தினமும் உள்ளடக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் திகதி அறிக்கையின் இலக்கம் 6 மற்றும் 7 ஆகிய மரணங்கள் பற்றிய விபரங்கள், தவறுதலாக இரண்டாம் திகதி அறிக்கையில் 3ம் மற்றும் 5ம் மரணங்களாக மீளவும் பதிவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினத்தில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக பதிவாகியிருந்த போதிலும் உண்மையில் அது 328 ஆக பதிவாகியிருக்க வேண்டுமென சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam