இலங்கையில் கோவிட் மரணங்கள் 20000 வரை அதிகரிக்கும்- அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை
இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் முதல் நாளாந்த கோவிட் மரணங்கள் 200ஐ தாண்டும் என வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவனமான IHME நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆயவிற்கமைய, கோவிட் பரவலை கட்டுப்படுத்தினால் செப்டெம்பர் மாதம் வரையில் 20000 மரணங்கள் என்ற எண்ணிக்கையில் அதனை தடுக்க முடியும். எனினும் நிலைமை இதனை விடவும் மோசமானால் மரணங்களின் 30000 வரை அதிரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிக்கைக்கமைய, ஜுன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நாள் ஒன்று 244 மரணங்கள் ஏற்படக்கூடும். அத்துடன் இந்த நிலைமை மோசமாகினால் ஏற்படும் தினசரி மரணங்கள் 350 வரை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட்டின் ஆபத்தான நிலைமை ஜுன் மாதத்தின் 2வது மற்றும் 3வது வாரத்தில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
IHME நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கமைய ஜுன் மாதத்தின் இரண்டாவது மற்றும் முன்றாவது வாரத்தில் மரணங்களின் எண்ணிக்கை 265 இல் இருந்து 307 வரை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.