புதுக்குடியிருப்பில் கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மக்களுக்கான கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடக்க நிகழ்வினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த தொடக்கி வைத்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்த மக்கள் நினைவாகச் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டு கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந், மாவட்ட செயலக கணக்காளர் கே.றெஜினோல்ட், புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலை வைத்தியர் தயானந்தறூபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஜெயந், வணிகர் சங்கத் தலைவர் நவநீதன், புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகக் கிராமங்கள் தோறும் மக்களுக்கான
விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் முகக்கவசம் என்பன
வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு கருத்தூட்டலும்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam