இந்திய தூதரகத்தில் சந்திப்பையடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநரின் பதவி விலகல்
புதிய இணைப்பு
ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய முஸம்மில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை அரச விதிகளுக்கு முரணாக சந்தித்துள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (05.09.2024) இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னரே முஸம்மில், தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு அரச விதிகளுக்கு முரணாக இடம்பெற்றுள்ளமையால் பல்வேறு இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்படலாம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் முஸம்மில் தரப்பிலிருந்தோ இந்தியத் தூதரகத் தரப்பிலிருந்தோ எந்தவொரு கருத்துக்களும் வெளிவரவில்லை.
இரண்டாம் இணைப்பு
ஊவா (Uva) மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (Muzammil) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முஸம்மில், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கொழும்பு மேயராக பணியாற்றியுள்ளதுடன் 2017 - 2019ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி காலத்தில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர், அவர் 2019இல் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன் 2020இல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
