கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Police Batticaloa Senthil Thondaman Selvarajah Kajendren
By Shan Sep 22, 2023 04:14 AM GMT
Report

தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (22.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொடூர கொலைவெறித் தாக்குதல் 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட ஏனையோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை | Governor Of Eastern Province Should Resign

பாதிக்கப்பட்டவர்களிடத்தும், ஒட்டு மொத்த தியாக தீபம் திலீபன் உணர்வாளர்களிடத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு துறை ஜனாதிபதியிடமே உள்ளது. அவரின் பிரதிநிதியாக மாகாணத்தில் செயல்படுபவரே ஆளுனர் .

அவர் தனது கடமையை செய்ய தவறி விட்டு அமைதியாக வீதியில் பயணித்த நினைவஞ்சலி குழுவினரை குற்றம் சாட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தியாக தீபம் திலீபனின் அகிம்சை உணர்வோடு கூறுகின்றோம்.

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

தியாக தீபம் திலீபனின் மக்கள் அஞ்சலி ஊர்தி பயணத்தை ஆரம்பித்து மூன்றாம் நாளே கொடூர கொலைவெறி இனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது .தாக்கியவர்களின் கைகளில் சிங்கக் கொடியே காணப்பட்டது.

அதுவே ஆளுநரின் அலுவலகத்தையும் உள்ளே அலங்கரிக்கின்றது. சிங்க சிந்தனையே தாக்குவதற்கு காரணம்.

அரச புலனாய்வாளர்

ஊர்தி பயணத்தை ஆரம்பித்த நேரத்தில் இருந்து அரச புலனாய்வாளர்களும் பொலிஸாரும் ஊர்தியை அதனோடு பயணித்தவர்களை நேரடியாக ஒளி/ஒலி பதிவு செய்ததோடு புகைப்படங்களையும் எடுத்து உரிய தரப்பிற்கு தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்ததோடு கள நிலவரங்களையும் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை | Governor Of Eastern Province Should Resign

இவர்களுக்கு கள நிலவரம் நன்றாக தெரிந்திருந்த நிலையிலேயே தாக்குதல் நடந்திருந்தது என்றால் அது திட்டமிட்ட இனவாதிகளின் செயல்பாடுகள் என்றே கூறவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரன் நேரடியாக அரசின் பாதுகாப்பை மறுத்து இருந்தாலும் அவருக்கான பாதுகாப்பை தனது மாகாணத்தில் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாகாண ஆளுநருக்கு உள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

ஊர்தி பயணத்தை ஆரம்பித்த முதல் நாளே அக்கரைபற்றில் எதிர்ப்பு இருந்தது. இரண்டாம் நாள் வாழைச்சேனை பிரதேசத்திலும் எதிர்ப்பு இருந்தது. இதனை நன்றாக தெரிந்திருந்த பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து பயணத்தை உரிய பாதுகாப்பின்றி தொடர்ந்து செல்ல அனுமதி தந்தார்கள் எனில் அது தாக்குதல் நோக்கம் கொண்டதாகும்.

இவ்வாறான தாக்குதலுக்கு இடம் அளித்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளே. மாகாண மட்டத்தில் அவருக்கு பொறுப்பாக இருக்கின்றவர்களும் குற்றவாளிகளே. ஆளுநரும் குற்றவாளியே.

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

காடையர்களை பாதுகாக்கும் ஆளுநர் 

சிங்கள பௌத்த இனவாத காடையர்களை பாதுகாக்க ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் ஊர்தியோடு பயணித்தவர்கள் மீதும் குற்றம் சுமத்துகின்றார். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எவருக்கும் உள்ளது.

ஆனால் தாக்குதல் நடத்தவும்,சேதங்கள் விளைவிக்கவும் எவருக்கும் உரிமை இல்லை. தாக்கி சேதங்களை விளைவித்தவர்களை பாதுகாக்கும் நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் கருத்து தெரிவிப்பதன் மூலம் அவர் யாருக்கு பொறுப்பு வகிக்கின்றார் என்பது தெளிவாக இருக்கிறது.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை | Governor Of Eastern Province Should Resign

எனவே ஆளுநர் அவர்கள் பொறுப்பு தவறியது முதற் குற்றம். பொறுப்பை தட்டிக் கழித்து பிழையை அடுத்தவர் மேல் சுமத்துவது அதனை விட பெரிய குற்றம். இன, மத ரீதியிலான கொலை குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்ற போது சாதாரண மக்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவது இயல்பே.

இதற்கு முகம் கொடுக்கவும், தமிழர்களின் அரசியலை வென்றெடுக்கவும் தமிழர் தேசமாக தியாக தீபம் திலீபனின் உயிர்தியாக நாளில் ஒன்று சேர்வோம். எம் மக்கள் சக்தியை வெளிப்படுத்துவோம். காண்பிப்போம் . அரசியல் வழிதடத்தை நாம் தீர்மானிப்போம் என தெரிவித்துள்ளார்.

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US