மேலும் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைக்க இலங்கை அரசு முடிவு
இலங்கையில் கோவிட் பரவலுக்கு மத்தியில், எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைப்பதற்கான முடிவைத் தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை அழைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுடன் சேர்ந்து, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் நவம்பரில் பிரான்சிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் தற்போது உலகின் மிகக்கூடிய நாளாந்த கோவிட் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன.
அங்கு நாள் ஒன்றுக்குச் சராசரியாக 7,500 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப் பறக்கச் செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு இடங்களிலிருந்து இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடில்லியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் வரவழைக்கப்படுவார்கள். வாரத்திற்கு நான்கு விமானங்களைச் சென்னைக்கும், மூன்று விமானங்களை மும்பைக்கும் ஒரு விமானத்தைப் பெங்களூருக்கும் இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள், பி.சி.ஆர் சோதனையில் எதிர்மறை அறிக்கையைப் பெற்றால், அவர்கள் வனவிலங்கு பூங்காக்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களுக்குப் பயணக் குமிழியின் கீழ் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
