சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர தயாராகி வரும் அரசு- நளின் பண்டார
தாவரவியல் ஆய்வு நிலையம் அண்மையில் நிராகரித்த சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வரத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
தற்போது பசளையை ஏற்றிய கப்பல் சிங்கப்பூரிலிருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது.
இந்த பசளை தொகையை இறக்கிக்கொள்ளுமாறு சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. சீனாவின் அழுத்தம் காரணமாக அதனை இலங்கையில் இறக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவின் பசளையில் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்து நுண்ணுயிர்கள் மற்றும் மல கழிவுகள் இருப்பதாகக் கூறி, ஆய்வு நிலையம், அதனை இறக்குமதி செய்ய வேண்டாம் என நிராகரித்திருந்தது.
சீனாவிலிருந்து கொண்டு வரப்படும் மல கழிவுகள் அடங்கிய, இலங்கையின் மண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், குப்பையான பசளையை இலங்கையில் உள்ள பயிர் நிலங்களில் பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என உழவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இந்த குப்பை பசளை இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam