ஜனாதிபதி ரணில் மீது தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
இந்த அறிவிப்பு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) முன்மொழியப்பட்ட அரசியல் ஊக்குவிப்பு திட்டத்தைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
முன்வைத்துள்ள கோரிக்கை
இன்று ஆரம்பமாகியுள்ள அஞ்சல் மூல வாக்களிப்பு காலப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பின் காலம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த நடவடிக்கை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என தமது முறைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது குறித்து தேர்தல் ஆணையகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
