இலங்கையின் நெருக்கடி குறித்து இந்திய மத்திய அரசு ஆய்வு
இலங்கையின் நெருக்கடி தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அழைத்திருந்த சர்வகட்சி மாநாடு நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றது.
இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நெருக்கடி குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேசிய மாநாட்டு கட்சியின் பாரூக் அப்துல்லா, திமுகவின் சார்பில் டி ஆர் பாலு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் வைகோ பால்சுவாமி இந்திய கம்யூனிச கட்சியின் பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அத்துடன் காங்கிரசின் சார்பில் பி.சிதம்பரம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பி தம்பிதுரையும் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri